உலக சாதனை முயற்சி...ஒரே இடத்தில் 500 பொங்கல் - அசத்திய மாணவர்கள்!

x

காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக சமத்துவ பொங்கலை வரவேற்கும் விதத்தில் 500 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கலை சாதனை பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் "ரப்பா புக் ஆப் உலக சாதனை" பதிவில் இடம் பெறுவதற்காக தனியார் பள்ளி சார்பில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி 500க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைத்து அதற்கு மஞ்சள் மாலைகளை கொண்டு அலங்கரித்து, பச்சரிசி, வெள்ளம் இட்டு பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்