"இந்தியாவை உலக நாடுகள் வளரும் நாடாக பார்க்கவில்லை" - மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x

இந்தியாவை உலக நாடுகள் வளரும் நாடாக அல்ல, வளர்ந்த நாடாக பார்ப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழ்நாடு தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், 2047 ஆம் ஆண்டு வல்லரசாக மாற வேண்டும் என்ற சவாலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்காக மாணவர்கள், உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். உலக நாடுகளில உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க இந்தியாவின் பார்வையை எதிர்பார்த்து உலக நாடுகள் இருப்பதாக ஆளுநர் ரவி கூறினார். இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக தற்போது யாரும் பார்க்கவில்லை. வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்