12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உலகக்கோப்பை..!

x

ஸ்குவாஷ் உலக‌க் கோப்பை தொடர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள மாலில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகனாத ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உல‌க‌க் கோப்பை தொடர் நடைபெற உள்ளதாகவும், 8 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கமாக உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த தொடரை, பொதுமக்கள் காணும் வகையில் மாலில் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்