"முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன" - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

x

விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சென்னை கோயம்பேட்டில், 10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், இரண்டரை கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏக்கள் பிரபாகர் ராஜா, ஜெ. கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முழுவீச்சில் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்