திருமணமாகாமல் கர்ப்பிணியான 19 வயது பெண்... பிரசவம் மூலம் குழந்தையை எடுக்க நினைத்த பெற்றோர்...

x

வாழப்பாடி, இந்திரா நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவம் மூலம் குழந்தையை வெளியே எடுக்க பெண்ணை அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு, பெண்ணுக்கு பிரசவ சிகிச்சை பார்த்த மருத்துவர் செல்வாம்பாள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், பெண்ணை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும் வற்புறுத்தியுள்ளார். உடனே, பெண்ணை மீட்ட பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு பெண் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பெண்ணுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் செல்வாம்பளின் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவர் செல்வாம்பாளை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்