"அனைவருக்கும் குழந்தை பாக்கியம்"- தாலியை அம்மனுக்கு செலுத்தும் பெண்கள்.

x

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, பண்டாரக்குப்பம் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பிடாரி அம்மன் வீதியுலா செல்லும் போது, திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலியை எடுத்து சாமிக்கு செலுத்துகின்றனர். இதுகுறித்து பேசிய கிராம மக்கள், திருமணமான ஒரு வருடத்தில் குழந்தை பிறந்தவுடன், பெண்கள் தாலியை அம்மனுக்கு செலுத்தி விடுவதாக தெரிவித்தனர். மேலும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே இவ்வாறு செய்வதாக தெரிவித்த அவர்கள், அனைவருக்கும் குழந்தை பாக்கியம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்