திடீரென கொட்டிய கனமழையால் மின்னல் தாக்கி பெண் பலி

x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், திடீரென கனமழை பெய்தது. வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நின்ற மழைநீரால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எனினும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கனமழையால் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மின்னல் தாக்கியதில் பசுமாடு ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது.


Next Story

மேலும் செய்திகள்