மாடியிலிருந்து போன் பேசி கொண்டு கீழே விழுந்த பெண் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை மதுரவாயல் பகுதியில், மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளம் பெண் உயிரிழந்தார். அலங்கார் நகர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவர், செல்போனில் பேசியபடி மாடியில் நடந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சௌமியாவின் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்