ரகசிய கேமராக்கள் வைத்து..."வீடியோ, ஆடியோ வெளியிடுவதாக மிரட்டல்" - தனியார் யூட்யூபர்கள் மீது பெண் பரபரப்பு புகார்

x

சென்னை மைலாப்பூரை சேர்ந்த மும்தாஜ் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பாஸ்கர் குமார் என்கிற ஹரிகிருஷ்ணன், வானவில் என்கிற வள்ளி, ஏஞ்சல் என்கிற வெண்ணிலா, மாயவன் என்கிற வினோத் வின்சென்ட் ராஜ் மற்றும் தமிழன் UK என்ற செந்தில் குமார் ராஜா ஆகியோர் மும்தாஜுக்கு பழக்கம் ஆகி உள்ளனர். அடிக்கடி தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்லும் இவர்களுக்கு, தன்னுடய அறக்கட்டளை மூலமாக அந்தப் பெண் பண உதவிகள் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இதே போன்று பலரிடமும் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு தெரியவந்ததால், இவர்களுடன் பேசுவதை நிறுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் தருமாறு மிரட்டி உள்ளனர். இல்லையென்றால், மும்தாஜின் வீட்டிற்கு வந்து சென்ற போது ரகசிய கேமராக்கள் வைத்து எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோ மற்றும் ஆடியோக்களை யூ ட்யூப்பில் வெளியிடுவதாக மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்