நாளை நடக்குமா கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டி? பிரான்ஸ் வீரர்களுக்கு வைரஸ் தொற்று

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நாளை ஆடவுள்ள பிரான்ஸ் அணியில், சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் ராஃபல், இப்ராஹிமா உள்ளிட்டோர் லேசான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வைரஸ் தொற்றுக்கு தாங்கள் அச்சப்படவில்லை என்றும், எல்லோரும் இறுதிப் போட்டிக்கு தயாராகிவிடுவோம் என நம்புவதாகவும் பிரான்ஸ் வீரர் டெம்பல் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்