செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படுமா?அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் | Nurse WorkIssue

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பணி நிரந்தரம்....
x

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பணி நிரந்தரம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அப்போது இந்த நிதியாண்டில் முதற்கட்டமாக 5 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்துள்ளார். 2015 - 2020 வரை எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியதாக சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கூறினார். காலி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தரப்படும் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்