சிலியில் கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் காட்டுத் தீ...விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டும் பணி தீவிரம்

x

சிலி நாட்டில் கட்டுப்படுத்த முடியாமல் பரவி வரும் காட்டுத் தீ 2 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. 275 இடங்களில் தற்போது தீ எரிந்து வரும் நிலையில், 69 இடங்களில் மட்டுமே தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரண்ட வானிலை மற்றும் அதிக வெப்பம் காரணமாக தீ அதிவேகமாக பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்டுத் தீயில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்