"எங்கள தாண்டி போயிருவியா நீ..!" - நடுவழியில் மலை ரயிலை வழி மறித்த காட்டுயானைகள்...வெளியான வீடியோ

x

குன்னூரில் மலை ரயிலை வழி மறித்த காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது... சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக 8ற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன. தற்போது மலை ரயில் பாதையில் அவை முகாமிட்டுள்ள நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரயிலை 3 காட்டு யானைகள் வழி மறித்தன. இதனால் வனத்துறையினர் யானைகளை விரட்டிய பின்னர்‌ ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்