சிங்கிளாக வந்து அனைவரையும் அதிர விட்ட காட்டு யானை... கோவையில் பரபரப்பு

x

கோவை மாவட்டம், ஆழியார் அருகே ஒற்றை காட்டு யானை தாக்குதலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த சில நாள்களாக ஆனைமலை அடுத்த நவமலை, வால்பாறை சாலை, ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானை அப்பகுதியில் உள்ள வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகிறது. ஆழியார் அறிவு திருக்கோயில் அருகேயுள்ள தோப்புக்குள் புகுந்து சுமார் 50 தெனை மரங்களை யானை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானையை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்