வண்டலூர் பெரிய ஏரியில் மிதந்த மனைவி... அடிக்கடி வரும் போன்கால்... விசாரணை வலையத்தில் கணவர்

x

இரண்டு நாட்களுக்கு முன்பு வண்டலூர் பெரிய ஏரியில் இருந்து இளம்பெண்ணின் சடலத்தை ஓட்டேரி காவல் நிலைய போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் பெரம்பூர் அருகே உள்ள ஓட்டேரி கொசப்பேட்டையைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரின் மனைவி ஸ்ருதி என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுருதி அடிக்கடி ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ருதியின் கணவர் சூரியபிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்