பற்களை பிடுங்கிய விவகாரம்... "கலர் உடையில் வந்து என் கணவனை..." - விசாரணைக்கு ஆஜரான மனைவி பரபரப்பு பேட்டி

x

நெல்லையில் தனது கணவரை கஞ்சா வழக்கில் போலீசார் போலியாக கைது செய்ததாக கூறி என விசாரணைக்கு ஆஜரான பெண் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

இதில், முத்துராமன் என்பவரின் மனைவி, தனது கணவரை கடந்த டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் போலீசார் போலியாக கைது செய்தனர் என்றும், அவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் முறையிட்டு கணவரை ஜாமினில் வெளியே எடுக்க வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்