ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி...தூவப்பட்டிருந்த மிளகாய் பொடி - கோவையில் அதிர்ச்சி

x

கோவை மாவட்டம் கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த தங்கமணி, சமையலறையில் கழுத்தறுக்கப்பட்டவாறு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, இது குறித்து சுப்பிரமணி போலீசில் புகாரளித்த நிலையில், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சடலத்தை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்து நகை, பணம் ஏதும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கொலைச் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்