திடீரென முடங்கிய வாட்ஸ்அப் - மீண்டும் செயல்பட தொடங்கியது! - என்ன நடந்தது?

x

இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வாட்ஸ் அப் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவல் பரிமாற்றமும் செய்ய முடியாமல் திணறினர். இதனிடையே வாட்ஸ் அப் சேவையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்நிலையில்,

சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வாட்ஸ் அப் சேவை சீராகியுள்ளது. இதனை அடுத்து பயனர்கள் மீண்டும் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் சேவை முடங்கிய நிலையில், ட்விட்டரில் வாஸ்ட் அப் டவுன் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்