மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக போராடிய பெண்ணிற்கு நடந்த அவலம் - Rapido ஓட்டுநர் செய்த பகீர் செயல்

x

பெங்களூரு நகரின் எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர், வெள்ளிக்கிழமையன்று, டவுன் ஹால் பகுதியில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராபிடோ பைக் டாக்ஸியை புக் செய்து வீட்டிற்கு சென்றுள்ளார். பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற போது, பைக்கை ஓட்டிச்சென்ற சிவப்பா என்பவர், அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், 200 மீட்டர் முன்னதாகவே இறங்கி விட்டார். அதோடு, அந்த நபருக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும் பைக் ஓட்டி வந்தவர், அந்த பெண்ணுக்கு செல்போனில் தொடர்ந்து தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாக கூறி, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த சிவப்பா மீது, பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்