குவைத்தில் நடந்தது என்ன?..."கணவன் மரணத்தில் மர்மம்" - நீதி கேட்டு பேரணி

x

குவைத்தில் நடந்தது என்ன?..."கணவன் மரணத்தில் மர்மம்" - நீதி கேட்டு பேரணி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்.

கடந்த 3ம் தேதி குவைத் நாட்டிற்கு முத்துக்குமரன் வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன், தன்னை ஒட்டகம் மேய்க்கச் சொல்வதாகவும், வேலை மிக கடினமாக இருப்பதாகவும் தனது மனைவி வித்யாவிடம் போனில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முத்துக்குமரன் இறந்துவிட்டதாக வந்த செய்தியை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுககள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனைவி வித்யா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கணவரின் உடலை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, முத்துக்குமரனின் மரணத்திற்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்