அரசு பேருந்து ஓட்டுநருக்கு விநோத மெமோ - போக்குவரத்து கழக ஊழியர்கள் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையின் கீழ் இயக்கப்படும் அரசு பேருந்து ஓட்டுநராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெயில் காலம் என்பதால் ஜெயக்குமார், வியர்வையை துடைக்க தான் பயன்படுத்தும் துண்டை தனது இருக்கையின் பின்புறத்தில் தொங்க விட்டுள்ளார். இதற்காக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், ஜெயக்குமாருக்கு மெமோ வழங்கியுள்ளனர். அதிகாரிகளின் இந்த செயல் போக்குவரத்து கழக ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது அந்த மெமோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்