"ஜஸ்ட் இன்வெஸ்ட் பண்ணி ரேட்டிங் குடுங்க சார்...".."அப்புறம் பாருங்க லம்பா தருவோம்" - டெலிகிராம் மூலம் வலை...ரூ.45 லட்சம் Gone...

x

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகரை சேர்ந்தவர் தங்கதுரை. இவரை செல்போன் மூலம் டெலிகிராமில் தொடர்பு கொண்ட கும்பல், நிறுவனம் ஒன்றுக்கு ரேட்டிங் செய்தால் கமிஷன் தருவதாக கூறி வலை விரித்துள்ளனர். இதை நம்பிய தங்கதுரை, 46 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார் , நெல்லை மாவட்டம் குப்பண்ணாபுரத்தை சேர்ந்த பிரேம் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், 61 சிம்கார்டுகள் மற்றும் 12 ஏடிஎம் கார்ட்களை பறிமுதல் செய்த நிலையில், தமிழகம் முழுவதும் இதேபாணியில் 25 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்