"16 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசுவோம்" - போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த பகீர் கடிதம்

x

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்களுக்கு தீவைக்க முயன்ற சம்பவத்தில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ.(SDPI) கட்சியை சேர்ந்த 6 பேரை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்த காவல்நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையெறி குண்டு வீசப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரிகள் அல்ல என்றும்,

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என அந்த கடித‌த்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்