"எங்களுக்கு நல்ல சம்பளம் வருது...லஞ்சம் தேவையே இல்ல"..டிஎஸ்பி அதிரடி பேச்சு

x

காவல்துறைக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என தனியார் மதுபான கூட உரிமையாளர்களிடம் கன்னியாகுமரி சரக டிஎஸ்பி வலியுறுத்தினார்... குமரியில் உள்ள சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்த நேரத்தினைக் கணக்கிடாமல் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதாக புகார்கள் குவிந்த நிலையில், தனியார் மதுபான கூட உரிமையாளர்களை அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டிஎஸ்பி மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழக அரசு நிறைவான ஊதியம் தருவதாகவும், காவல்துறைக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்