3 மாதங்களுக்கு முன் போடப்பட்ட கழிவு நீர் கால்வாய்... பெயர்ந்து வந்த சிமெண்ட், ஜல்லி கற்கள்...

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட கழிவு நீர் கால்வாயின் சிமெண்ட், ஜல்லி கற்கள் பெயர்ந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அம்பலூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 2022 ஆண்டு அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க, சுமார் 7.71 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி 3 மாதங்களில் நிறைவடைந்தது. இதனிடையே, ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே அந்த கழிவு நீர் கால்வாய் கான்கிரீட் சிமெண்ட் பெயர்ந்து வந்ததாக அப்பகுதி மக்கல் குற்றம் சாட்டினர்


Next Story

மேலும் செய்திகள்