வெள்ளத்தால் தீவு போல் மாறிய கிராமம் - சிக்கிய 37 பேரையும் போராடி மீட்ட வீரர்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் கோட்டைக்குப்பம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 37 பேர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட உபரிநீரால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம் ஒருபுறம், ஓடை மறுபுறம் என பெரியபாளையம் அருகே உள்ள கோட்டைக்குப்பம் கிராமம் தீவு போல் மாறியுள்ளது.

இதனால், அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர், விரைந்து வந்த வீரர்கள் 14 குழந்தைகள் உட்பட 37 பேரையும் பத்திரமாக மீட்டு மறுகரைக்கு அழைத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்