பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை புரட்டியெடுத்த ஊர் மக்கள் - தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதல்

குளித்தலையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை தாக்கப்படும்போது போலீசாரும் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
x

கரூர் மாவட்டம் குளித்தலை வேளார் தெருவில் உள்ள தென்கரை வாய்க்கால் படித்துறையில், பெண்மணி ஒருவர் இரவு நேரத்தில் பாத்திரம் விளக்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், பெண்மணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அந்த பெண்மணி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை விரட்டி பிடித்து தாக்கியுள்ளனர். இதனை கண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்மணியிடம் தகாத முறையில் நடந்த நபரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது போலீசாரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது வாகனமும் தாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவழியாக அந்த நபரை ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார், சிவகுமார் என்ற அந்த நபரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்