அடுக்கடுக்காக உயர்ந்து கொண்டே போகும் கள்ளச்சாராயம் பலிகள் - அதிர்ச்சி தகவல்

x

கள்ளச்சாராயம் குடித்ததால், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தம்18ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அடுத்த‌டுத்து உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழப்பு 5 ஆக உள்ளது.

இதே போன்று, விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த‌ நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்