வேலூர் ஆவின் விவகாரம் - ராமதாஸ் பரபரப்பு ட்வீட் | Vellore

x

வேலூர் ஆவின் பால் பண்ணையில் நடந்த திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வேலூர் ஆவின் பால் பண்ணையில், பல கோடி ரூபாய் மதிப்பில் திருட்டு சம்பவம் நடைபெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்கள் பயன்படுத்தி திருட்டு சம்பவம் நிகழ்ந்ததால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட ராமதாஸ், ஆவின் நிறுவன கண்காணிப்பு அதிகாரிகளை மீறி முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றார். இது குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்