விசிக மாவட்ட செயலாளரை கைது செய்ததால் ரோட்டில் நின்ற பைக்குகளை தள்ளிவிட்ட தொண்டர்கள்

x

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி டவுன் கோட்டை வீதி அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த

அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில், இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. இந்த கடையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, சின்னகண்ணன். விடுதலைசிறுத்தை கட்சியினர் மீது ஆரணி நகர காவல்நிலையத்தில

புகார்அளித்தார். இதே போல் தங்களை தரைக்குறைவாக பேசியதாக சின்னகண்ணன் மீது வி.சி.கவினர் புகார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்