இலவச புடவைக்காக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை விட்ட 4 பெண்கள் - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தனியார் நிறுவனம் சார்பில், இலவச வேட்டி சேலைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகில் தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதனையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புடவைகளுக்கான டோக்கன்களை பெற ஒரே இடத்தில் குவிந்தனர்.

அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பெண்கள் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்