"டிசம்பர் 18 வரை இப்படி தான்...." - வானிலை ஆய்வு மையம்

x

தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...

வரும் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும்,வரும் 19ம் தேதி, ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

17ம் தேதி வரை அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், தென்கிழக்கு, மத்தியகிழக்கு, மத்திய மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடலிலும், இன்று தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும், நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்