லைசன்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி, ஃப்ரிட்ஜிக்குள் மான் தலை - அதிர்ந்துபோன போலீசார்

x

சேலத்தில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த ரகசிய தகவலை தொடர்ந்து,சிவதாபுரம் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி மற்றும் பல்ரஸ் குண்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிகளை வைத்து, பெரம்பலூர் சென்று மானை வேட்டையாடி, கறியை எடுத்து வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். வேட்டையாடிய மானின் தலையை அவரது வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்திருந்ததும் தெரிய வந்த நிலையில்,அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்