திருப்பதி லட்டு விநியோக மையத்தில் லட்சத்தை லவட்டிய மர்மநபர்! போலீசார் விசாரணை

x

திருப்பதி மலையில் உள்ள லட்டு விநியோக மையத்தில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு விநியோகம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில் 36 வது நம்பர் கவுண்டரில் லட்டு விநியோக பணியில் இருந்த நபர் விநியோகத்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.

அப்போது உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்