ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் - நிதின் கட்கரி... தேவஸ்தானம் கொடுத்த நினைவுப்பரிசு...

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனது குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து​கொள்வதற்காக நேற்று மாலை திருப்பதி வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நேற்றிரவு திருமலையில் தங்கினார். இன்று அதிகாலை தோமாலை சேவையில் கலந்து கொண்டு, குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகளை அதிகாரிகள் வழங்கினர். தேவஸ்தான வேத பண்டிதர்கள், வேத ஆசி வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்