மரண தண்டனை கொடுத்த 'UAE'...உயிரை காப்பாற்றிய லூலு குழும தலைவர் - கண்ணீருடன் நன்றி சொன்ன ஓட்டுநர்

x

ஐக்கிய அரபு எமிரேட்சில், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த, பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர்,கடந்த, 2012 - ம் ஆண்டு சாலையோரம் நின்ற குழந்தைகள் மீது காரை மோதியதில், சூடானை சேர்ந்த சிறுவன் உயிரிழந்தான்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு, மரண தண்டனை விதித்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, கேரள தொழிலதிபரும், 'லுாலு' குழும தலைவரான யூசுப் அலி, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தை, அதற்காக சந்தித்து பேசி இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வழங்கினார்.

இதையடுத்து கிருஷ்ணனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் யூசுப் அலியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்