இருசக்கர வாகன விபத்து - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு...பெண்ணின் சடலத்தை சாலையில் வைத்து ஆர்ப்பாட்டம்..!

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சாலையில் வைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொடமாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் என்பவர், ஞாயிற்றுக்கிழமை அன்று இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, ரஞ்சிதத்தின் உடலை கொடமாண்டப்பட்டி அருகே சாலையில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்ய வேண்டும், சாலையில் மின்விளக்கு, வேகத்தடை அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்