நேருக்கு நேர் மோதிய இரு லாரிகள் | லாரிக்குள்ளேயே உடல் கருகி இருவர் பலி | பதைபதைப்பு காட்சிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்து டாரஸ் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி, எதிரே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டாரஸ் லாரி திடீரென தீ பற்றி ஏறிந்ததில், வட மாநிலத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர்கள் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்