உயிரோடு உள்ளே இறங்கி சடலமாக வெளியே வந்த இருவர் - நொடி பொழுதில் தாக்கிய விஷவாயு

x

புழல் காவாங்கரை குருசாந்தி நகரில் நிர்மலா என்பவரின் வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், மொன்டியம்மன் நகரை சேர்ந்த கணேசன், பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய மூவரும் ஈடுபட்டனர்.

பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய இருவரும் கழிவுநீர்த் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கியுள்ளனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் மயங்கியுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், கணேசன் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி, மயங்கிக் கிடந்த இருவரையும் சடலமாக மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/aoJulU4g1I4இது குறித்து புழல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்