மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் ..பாரில் சோதனை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

x

தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதியில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மதுபான பாரை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், டாஸ்மாக்கையும் பூட்டி விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என விசாரணை நடத்தி வரும் போலீசார், மதுவில் சயனைடு கலந்தது குறித்து விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட மதுபான பார் மற்றும் டாஸ்மாக்கில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்குள்ள மதுபாட்டில்களை கைப்பற்றி அதில் சயனைடு உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்