தி.மலை 4 ஏடிஎம் கொள்ளை சம்பவம்.. ஒரே ஏடிஎம்-ல் மட்டும் இவ்ளோ திருட்டு - வெளிவந்த பரபரப்பு தகவல்

x

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், கலசப்பாக்கம் ஏடிஎம் மையத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறை தெரியவந்துள்ளது.

திருமண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இதில், கலசப்பாக்கம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொள்ளை நடந்த ஏடிஎம் மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்