துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் - ஹோட்டல் இடிபாடுகளில் சடலமாக மீட்பு

x
  • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாயமானதாக தேடப்பட்ட இந்தியர் விஜய்குமார், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
  • பெங்களூருவை சேர்ந்த விஜய்குமார் தொழில் நிமித்தமாக துருக்கி சென்றிருந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி, கடந்த 6ஆம் தேதி மாயமானார்.
  • இந்நிலையில், மலாட்யா என்ற இடத்தில் உள்ள ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து விஜய்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
  • இது குறித்து தெரிவித்துள்ள இந்திய தூதரகம், விஜய்குமாரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்