பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து... துடி துடித்து பலியான கல்லூரி மாணவர்கள் - விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றபோது விபரீதம்

x

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வாக், பஹிம் என்ற 2 கல்லூரி மாணவர்கள், விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது கனரக லாரி மோதியதில், அஸ்வாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய பஹீம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்