சிக்காமல் ட்ரிக்ஸாக தொடர் வழிப்பறி... கடைசியில் செருப்பால் சிக்கிய திருடர்கள் - தட்டி தூக்கிய போலீசார்

x

திருவாரூர் அருகே, தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 ஆசாமிகளை, செருப்பை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சக்தி விமலா என்பவரிடம், கற்கத்தி பாலம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, வழிப்பறியில் ஈடுபட்ட இருவர், இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. பைக்கில் வேகமாக சென்றதால், வண்டி எண்ணை போலீசாரால் கண்டறியமுடிவில்லை. ஆனால், பின்னால் அமர்ந்து சென்ற நபர், வெள்ளை நிற செருப்பு அணிந்திருந்ததால், அதனை வைத்து போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், பெண்ணிடம் வழிப்பறி செய்தது உறுதியானது. கைதானவர்கள் இமானுவேல், கோகுலேஷ் என்பதும், பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்