திருச்சியில் பெண்ணை தர தரவென இழுத்து சென்ற கொடூர சம்பவம் - காவல்துறை எடுத்த அதிரடி முடிவு

x
  • திருச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பேராசிரியை கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள காவல்துறை தடை விதித்துள்ளது.
  • திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலை அருகேயுள்ள தனியார் பள்ளி மைதானத்தில், அண்ணா பல்கலைகழகத்தின் பேராசிரியை சீதாலட்சுமி என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
  • அப்போது, தாராநல்லூர் கீழக்கரை பஜாரை சேர்ந்த செந்தில்குமார் என்ற நபர், பேராசிரியரை கொடூரமாக தாக்கி அவரின் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளியின் மைதானத்தில் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்