புகார் அளித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..? - டாட்டூ குத்தி ஆசை வலை விரித்த ஆசிரியை..?

x

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துட்டதா ஆசிரியையும், திட்டமிட்டு ஏமாத்துறதா காவல் ஆய்வாளரும் மாறி மாறி, ஆடியோ போட்டோ ஆதாரங்கள வெளியிட்டுட்டு வராங்க... யார் சொல்றது உண்மை என்ன நடந்தது?


கையிலே வாட்சாப் சேட்களை பிரிண்டு எடுத்து வைத்து கொண்டு தன்னை ஒரு காவல் அதிகாரி ஏமாற்றி விட்டதாக குமுறி குமுறி அழுது கொண்டிருக்கும் இந்த பெண்ணின் மாஸ்டர் ப்ளான் ஆடியோ தான் இது....

எந்த காவல் அதிகாரியை பற்றி புகார் கொடுக்க வந்தாரோ அதே இன்ஸ்பெக்டர் பெயரை பச்சை குத்தி பக்காவாக கரக்ட் பண்ணுவது எப்படி என தோழியிடம் ஐடியா கேட்டு அரங்கேற்றம் செய்திருக்கிறார் இவர்.

லவ் புரொபோசல், ஆபாச சேட்டிங், வீடியோ கால், என கண்டதையும் பண்ணிவிட்டு காவல் அதிகாரி கழற்றி விட நினைப்பதாக புகார் கூறும் இளம்பெண் ஒருபுறம்...

இது எல்லாம் இளம்பெண்ணின் சதிவேலை என குற்றம் சாட்டும் காவல் அதிகாரி மற்றொருபுறம்...

உண்மையில் நடந்தது என்ன..?



திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நின்றிருக்கும் இவர் கிரிஜா. 27 வயதாகிறது, சென்னையை சேர்ந்தவர். திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்திருக்கிறார். பகுதி நேரமாக வீட்டிலேயே பயிற்சி வகுப்பும் நடத்தியிருக்கிறார்.

இந்நிலையில் தான் கிரிஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி காவல் நிலையத்தில் ஆய்வாளாராக பணியாற்றும் சுகுமார் என்பவரிடம் இருந்து மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது.

அதில் காவல் ஆய்வாளர் சுகுமார், கிரிஜாவிடம் இரவு நேரங்களில் மட்டுமே மெசேஜ் செய்வதாகவும், மேலும் காதலிப்பதாக கூறி ஆபாசமாக சேட் செய்வது, அந்தரங்க படங்களை அனுப்புவது, வீடியோகால் செய்வது என எல்லை மீறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கிரிஜா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுமாரின் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அப்போது புகாரை பெற்றுக்கொள்ளாமல், கிரிஜாவின் சேலையை உருவி, அவரை அடித்து வெளியேற்றியதாக கிரிஜா கூறுகிறார்.


இவை அனைத்திற்கும் காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு பாலியல் சம்பவம்.

ஆம்....கிரிஜாவின் மாமன் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்வு எழுதுவதற்காக திருச்சிக்கு வந்திருக்கிறார். கிரிஜாவின் வீட்டில் தங்கி, தேர்வுகளை எழுதி இருக்கிறார்.

தேர்வு எழுத வந்த அந்த வாலிபரோ, கிரிஜாவின் மீது மோகம் கொண்டிருக்கிறார். கிரிஜா தனிமையில் இருப்பதை பயன்படுத்திகொண்டு, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

அந்த கொடூரத்தை வீடியோவாக எடுத்து வைத்து, கிரிஜாவை மிரட்டி பணம் கேட்டு வந்திருக்கிறார். உடனே கிரிஜா கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கில் மேல்விசாரனைக்காக சென்ற போது தான் காந்தி மார்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாருக்கு கிரிஜாவின் செல்போன் எண் கிடைத்திருக்கிறது.

அதை வைத்து தான் மெல்ல ரூட்டுபோட்டு, அந்தரங்க போட்டோ அனுப்பி தன்னை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதாக புகார் அளித்திருக்கிறார் கிரிஜா.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யபட்டிருக்கிறார். ஆனால் கிரிஜா கூறும் அத்தனையும் பொய் என்றும், அவர் தான் தனக்கு காதல் வலை வீசி பின்னால் சுற்றி வந்ததாகவும் கூறி ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார் சுகுமார்.


சுகுமாரை சிங்கம் பட சூர்யாவை போல் இமேஜின் செய்து அவரை எப்படி கரக்ட் செய்வது என கிரிஜா தோழியிடம் ஐடியா கேட்டிருக்கிறார்.

அந்த இடத்தில் பச்சை குத்தி அவருக்கு காட்டினால், மயங்கி விடுவார் என பலே ப்ளான் போட்டு சிங்கத்தை..., மன்னிக்கவும் சுகுமாரை ஆசைகாட்டி வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது..

அந்தரங்க போட்டோக்களோடு கிரிஜாவும், கரக்ட் பண்ணும் ஆடியோவோடு சுகுமாரும் மாறி மாறி ஆதாரங்களை வெளியிட்டு வரும் நிலையில், உண்மை யார் பக்கம் உள்ளது குற்றவாளி யார் என்று போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.


Next Story

மேலும் செய்திகள்