படிக்கட்டில் ஸ்பைடர்-மேன் போல் பயணம் - மாணவர்களின் ஆபத்தான செயலால்... நெல்லை அருகே அதிர்ச்சி

x

நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்படும் பேருந்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளார்குளம் செல்ல கூடிய அரசு பேருந்து ஒன்றில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இத்தகைய ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்