விமானம் சுக்குநூறாகியும் பயிற்சி பைலட் - காயமின்றி தப்பிய அதிசயம்

x

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காலை 11:30 மணிக்கு ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட விமானம் இயந்திர கோளாறு காரணமாக உடனடியாக தரையில் விழுந்தது. விமானம் விழுந்த போது அதில் இருந்த அனூப் நாயர், காயமின்றி உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் விசாரணையை தொடங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்