மாஜி காதலியை அடைய விபரீதம் - கணவருக்கு அந்தரங்க போட்டோ..டிரைவரை கல்லால் அடித்தே கொன்ற பயங்கரம்

x

தெலங்கானா மாநிலத்தில், 24 வயது லாரி டிரைவர் மீது பாறாங்கல்லை போட்டுக் கொலை செய்திருக்கிறது ஒரு குடும்பம். என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்.

தெலங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள இந்தரம் கிராமம், கோடை வெயில் சுட்டெரித்த போதிலும், அந்த நிமிடம்வரை அமைதியாகத்தான் இருந்தது.

இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞரை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வழிமறித்து தாக்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நேரத்தில், நிலை குலைந்து விழுந்த அந்த இளைஞரின் தலையில் பாறாங்கல்லைப் போட்டுத் தாக்கியுள்ளனர்.

அந்த இளைஞர் மயக்கத்தில் இருந்து மீளாத போதிலும், அவர்கள் கல்லால் தாக்கியே கொலை செய்துள்ளனர். பட்டப் பகலில் பலர் கண்முன் நடந்த இந்த கொலையை அங்கிருந்தவர்கள் செல்போனில் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மஞ்சிரியாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரித்தபோது முழு விவரங்கள் தெரியவந்ததன.

உயிரிழந்தவர் லாரி டிரைவர் மகேஷ் என்பதும், அவரைக் கொலை செய்தவர்கள் கனகையா, அவருடைய மனைவி பத்மா, அவர்களின் மகள் மௌனிகா, மகன் சாய் என்பதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட மகேஷும், கனகையாவின் மூத்த மகள் சுருதியும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு ஸ்ருதிக்கு வேறோருவருடன் திருமணம் நடைபெற்றது.

ஸ்ருதி மகிழ்ச்சியாக இருக்க கூடாது என்று எண்ணிய மகேஷ், காதலித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்ருதியின் கணவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ருதியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பிறகு தினமும் ஸ்ருதி வீட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் மகேஷ், வீட்டு வாசல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காது கிழிய ஹாரன் அடித்து தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில், மகேஷுக்கு வீடியோ கால் செய்த ஸ்ருதி, உன்னை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். நாம் சேர்ந்து வாழ்வோம் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

ஆனால், அதை மகேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகேஷின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஸ்ருதியின் பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மகளின் வாழ்க்கையை சீரழித்தது மட்டுமல்லாமல் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கிறானே என்று கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன் பிறகுதான் ஸ்ருதியின் தந்தை, தாய், சகோதரி, தம்பி நான்கு பேரும் சேர்ந்து, தங்கள் வீட்டுக்கு முன்பே மகேஷை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். கொலை செய்த 4 பேரும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்