போதையில் தாயை தாக்கிய கொடூர மகன்கள்தாய்க்கு நேர்ந்த சோகம்

x

திருவள்ளூரில் மது போதையில் தாயை தாக்கி கொலை செய்ததாக இரண்டு மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரை அடுத்து உள்ள காக்களூர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா, தனது இளைய மகன் ரஞ்சித்துடன் இருந்து வருகிறார். இந்தநிலையி ரஞ்சித்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோபித்துக் கொண்டு அருகில் உள்ள மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்க்கு சென்று இருக்கிறார்.அங்கு ராஜேஷ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மஞ்சுளாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த மஞ்சுளாவை அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருந்துவர்கள் மஞ்சுளா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்